lotus gardens

புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லமும் அதனை நோக்கிய நடைபாதையும்

"உங்கள் பார்வை உலகம் தழுவியதாக இருக்கட்டும்..."

பஹாவுல்லா

 

வரலாற்று காலம் முழுவதும், தெய்வீக அவதாரங்களின் மூலமாக கடவுள் மனிதகுலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அவதாரங்களின் வாயிலாக நமக்கு வழிகாட்டவும் கல்வியூட்டவும் செய்து, மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான அடிப்படையை வழங்கி வந்துள்ளார். இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் வந்தவர்களுள் தலையாய அவதாரங்களாக ஆபிரகாம், கிருஷ்ணர், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது நபி போன்றோர் அடங்குவர். இவர்கள் அனைவரின் சமயங்களும் ஒரே தோற்றுவாயைக் கொண்டுள்ளன என்பதோடு அச் சமயங்கள் யாவும் கடவுளின் ஒரே சமயத்தின் அடுத்தடுத்த வெளிப்பாடுகளும் ஆகும்.

 

இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாக வந்தவர்தான் பஹாவுல்லா. பஹாவுல்லா அவர்கள், இக்காலத்திற்குத் தேவையான புதிய ஆன்மீக மற்றும் சமூக போதனைகளைக் கொண்டுவந்துள்ளார். கடவுள், மனிதகுலம் மற்றும் சமயங்களின் ஒருமைப்பாடு குறித்து போதித்தார்.

 

“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் பிரஜைகள்,” என பஹாவுல்லா கூறியுள்ளார். அதோடு, கடந்த காலத்தின் அனைத்து புனித நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலம் ஒற்றுமையோடு வாழ வேண்டிய காலம் இதுவே எனவும் பஹாவுல்லா கூறுகிறார்.

1844ம் ஆண்டு உருவான பஹாய் சமயம், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. பஹாய் சமயத்தின் உறுப்பினர்கள் இன்று 100,000க்கும் அதிகமான உள்ளூர்களில் வசித்து உலகின் ஒவ்வொரு நாடு, இனக்குழு, கலாச்சாரம், தொழில், மற்றும் சமூக அல்லது பொருளாதாரப் பின்னனியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.

 

மனிதக்குலத்திற்கு இன்று ஒரு முக்கிய தேவை உள்ளதென பஹாய்கள் நம்புகின்றனர். முதலில், மனிதவாழ்வின் இயல்பு, நோக்கம் ஆகியவை, பிறகு சமுதாயத்தின் வருங்காலம் எனும் இரண்டையும் ஒன்றுபடுத்தக்கூடிய தூரநோக்கை மனிதர்கள் இன்று பெறவேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். பஹாவுல்லாவின் புனித எழுத்துக்களில் இது குறித்த ஒரு தூரநோக்கு வெளிப்படக்காணலாம்.

sydney temple

இரான் நாட்டு பஹாய்களுக்கான உலக நீதி மன்ற செய்தி. new

 

இரான் நாட்டில் தற்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளால் சோகவயப்பட்ட இதயங்களுடன், அந்த நாட்டில் வசிக்கும் பஹாவுல்லாவின் உறுதிமிகு விசுவாசிகளுக்கு உலக நீதி மன்றத்தின் கடிதம். (தொடர்ந்து படிக்க...)

 

சிறைப்படுத்தப்பட்ட பஹாய்களை விடுவிக்கக் கோரி ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாட்டு அரசாங்கங்கள் அறிக்கைகள் விடுத்துள்ளன(26 மே 2009) இச் செய்தியை ஆங்கிலத்தில் காண:

 

 

"இக்காலக்கட்டத்தில் உள்ள  கற்றோரும் உலக அறிவுடையோரும் மனிதகுலத்தை தோழமை மற்றும் அன்பு எனும் நறுமணத்தை நூகர்ந்திட அனுமதிப்பார்களேயானால், உண்மையான சுதந்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய உள்ளம் ஒவ்வொன்றும் கிரகித்தும், குலைக்கமுடியாத அமைதியையும் முழுமையான அமைவடக்கதின் இரகசியத்தையும் கண்டுகொள்வர்"

-பஹாவுல்லா-

 

ஓப்ரா வின்ஃபிரய் நிகழ்ச்சியில் ரேய்ன் வில்சன்

 

rainn and oprah

 

"ஓப்ரா வின்பிரய் ஆன்மீக தொடர்புகள்" எனப்படும் இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சியில் "தி ஆஃபீஸ்" எனப்படும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய பாகமேற்று நடிக்கும் ஒரு பஹாய் நம்பிக்கையாளரான திரு ரேய்ன் வில்ஸன் தாம் ஆனமீகம் சம்பந்தமாக உருவாக்கியிருக்கும் தமது இணையப்பக்கம் (SoulPancake.com) குறித்து ஓப்ரா அவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமது சமய நம்பிக்கை குறித்த கருத்துக்களை மிகவும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இவர்களின் கலந்துரையாடலை ஆங்கிலத்தில் செவிமடுக்க இங்கே செல்லவும்:

 

 

 

 

 

 

இணைப்புக்கள

 

 

 

உலக நீதி மன்றம்

 

தொடர்புகள்...

பன்மையில் ஒருமை, மனிதகுல ஒற்றுமை மற்றும் நமது உள்ளங்களை இணைத்திடும் விஷயங்களைக் கொண்டாடும் படைப்பாற்றல் மிக்க காட்சியகம்

(நன்றி, http://www.bahai.org)

 

 

அனைத்துலக சமூக அறிக்கைகள்

 

 

முக்கியமான வேறு சிலர்

 

 

பிற கட்டுரைகள்

 

 

 

monasdream{மோனாவின் கணவு}இத்திரைப்படம் மோனா, அவரது தந்தை மற்றும் அவரோடு தியாகமரணமுற்ற வேறு பல பஹாய்களின் கதையை விவரிக்கும்.. 2008 அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு துவங்கப்பட்டு 2009 ஏப்ரல் மாதத்திற்குள் படிப்பிடிப்பு முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விவரங்களுக்கு: http://www.monasdream.com

    

 

radionur

-அல்லது-radio

 

இது 24 மணி நேர பஹாய் இணைய வானொலி. இங்கு பன்மொழிகளில் பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் செவிமடுக்கலாம். வானொலியை உங்கள் கணிணியின் வாயிலாக செவிமடுக்க பின்வரும் இணையபக்கத்திற்கு செல்லவும். http://www.radionur.com