

பஹாவுல்லாவின் நினைவாலயத்தின் ஒரு காட்சி
வரலாற்று காலம் முழுவதும், தெய்வீக அவதாரங்களின் மூலமாக கடவுள் மனிதகுலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அவதாரங்களின் வாயிலாக நமக்கு வழிகாட்டவும் கல்வியூட்டவும் செய்து, மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான அடிப்படையை வழங்கி வந்துள்ளார். இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் வந்தவர்களுள் தலையாய அவதாரங்களாக ஆபிரகாம், கிருஷ்ணர், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது நபி போன்றோர் அடங்குவர். இவர்கள் அனைவரின் சமயங்களும் ஒரே தோற்றுவாயைக் கொண்டுள்ளன என்பதோடு அச் சமயங்கள் யாவும் கடவுளின் ஒரே சமயத்தின் அடுத்தடுத்த வெளிப்பாடுகளும் ஆகும்.
இந்த தெய்வீக அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாக வந்தவர்தான் பஹாவுல்லா. பஹாவுல்லா அவர்கள், இக்காலத்திற்குத் தேவையான புதிய ஆன்மீக மற்றும் சமூக போதனைகளைக் கொண்டுவந்துள்ளார். கடவுள், மனிதகுலம் மற்றும் சமயங்களின் ஒருமைப்பாடு குறித்து போதித்தார்.
“உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் பிரஜைகள்,” என பஹாவுல்லா கூறியுள்ளார். அதோடு, கடந்த காலத்தின் அனைத்து புனித நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலம் ஒற்றுமையோடு வாழ வேண்டிய காலம் இதுவே எனவும் பஹாவுல்லா கூறுகிறார்.
1844ம் ஆண்டு உருவான பஹாய் சமயம், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. பஹாய் சமயத்தின் உறுப்பினர்கள் இன்று 100,000க்கும் அதிகமான உள்ளூர்களில் வசித்து உலகின் ஒவ்வொரு நாடு, இனக்குழு, கலாச்சாரம், தொழில், மற்றும் சமூக அல்லது பொருளாதாரப் பின்னனியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
மனிதக்குலத்திற்கு இன்று ஒரு முக்கிய தேவை உள்ளதென பஹாய்கள் நம்புகின்றனர். முதலில், மனிதவாழ்வின் இயல்பு, நோக்கம் ஆகியவை, பிறகு சமுதாயத்தின் வருங்காலம் எனும் இரண்டையும் ஒன்றுபடுத்தக்கூடிய தூரநோக்கை மனிதர்கள் இன்று பெறவேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். பஹாவுல்லாவின் புனித எழுத்துக்களில் இது குறித்த ஒரு தூரநோக்கு வெளிப்படக்காணலாம்.

ஜெனேவா -- கைது செய்யப்பட்ட பஹாய்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் எனும் கூற்றை பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையாக மறுக்கின்றது.
9 ஜனவரி 2010
இரான் நாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்களின் விசாரனை நாள் நெருங்குகிறது
ஜெனேவா – சமீப காலமாக இரான் நாட்டில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளால் அடுத்த செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு உட்படுத்தப்படுத்தப்படவிருக்கும் ஏழு பஹாய்களின் இறுதி தலைவிதி குறித்து பெரும் கவலை தரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உலகச் சமயங்களின் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகின்றது
4 நவம்பர் 2009
மெல்பர்ன், ஆஸ்திரேலியா, 4 டிசம்பர் (BWNS) – ஐந்து கண்டங்களிலுமுள்ள பஹாய்கள் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் அளிக்கைகள் செய்கின்றனர்.
இரான் நாட்டு பஹாய்கள் குறித்த செய்திகள்
(updates in Egnlish)
-பஹாவுல்லா-
ஓப்ரா வின்ஃபிரய் நிகழ்ச்சியில் ரேய்ன் வில்சன்

மேலும் அதிகமான கட்டுரைகளை படித்திட இங்கு செல்லவும்
{யூனிகோட்}எழுத்துக்கள் ஒழுங்காகத் தோன்றவில்லையா? இது யூனிகோட் தளம். விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
மேலும் விளக்கங்களுக்கு...
பன்மையில் ஒருமை, மனிதகுல ஒற்றுமை மற்றும் நமது உள்ளங்களை இணைத்திடும் விஷயங்களைக் கொண்டாடும் படைப்பாற்றல் மிக்க காட்சியகம்
(நன்றி, http://www.bahai.org)
{மோனாவின் கணவு}இத்திரைப்படம் மோனா, அவரது தந்தை மற்றும் அவரோடு தியாகமரணமுற்ற வேறு பல பஹாய்களின் கதையை விவரிக்கும்.. 2008 அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு துவங்கப்பட்டு 2009 ஏப்ரல் மாதத்திற்குள் படிப்பிடிப்பு முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விவரங்களுக்கு: http://www.monasdream.com