|
பஹாய் சமயம்
ஓர் அறிமுகம்
|
|||||||||||
|
1844ம் ஆன்டில் பாரசீக நாட்டில் உதித்த பஹாய் சமயம் இன்று குறைந்தது 300க்கும் அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் சுமார் 65 லட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான உலகளாவிய சமயமாகும். பஹாய்கள் இன்று உலகம் முழுவதும் 120,000க்கும் அதிகமான உள்ளூர் சமூகங்களில் வசித்து வருகின்றனர்.
பஹாய் சமயத்தை
வெளிப்படுத்தியவரின்பெயர் பஹாவுல்லா. “பஹாவுல்லா”என்பதன் மொழியாக்கம்,
“இறைவனின் ஓளி”அல்லது “தேஜஸ்” என்பதாகும். வடமொழியில் "விஷ்னு
யாஷா" எனவும் மொழிபெயர்க்கலாம். இதையே ஆங்கிலத்தில் "Glory of
God" என கூறப்படுதின்றது. பஹாவுல்லா, இவ்வுலக
மாற்றங்களும் வாய்ப்புக்களும் மட்டுமே வாழ்வு என்பதல்ல
எனவும், ஆன்மாவில் ஏற்படும் வளர்ச்சியே அதன் உண்மையான சிறப்பு எனவும், மனித
வாழ்வு, அதாவது ஆன்மாவின் வாழ்வு இவ்வுலகின் ஒரு குறுகிய காலத்தில் நடைபெற்று
இறைவனின் வெவ்வேறு உலகங்களில் என்றும் நிலையாகத்
தொடர்கின்றது எனவும் பஹாவுல்லாவின் பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறப்படுகின்றது: இறைவா, நீர் மனிதர்கள் யாவரையம் ஒரே பெற்றோரிலிருந்து ஆக்கியுள்ளீர்; எல்லோரும் ஒரே குடும்பமாய் வாழ விதித்துள்ளீர்.... மனுக்குலம் ஒரே இறைவனை தனது படைப்பாளராக கொண்டுள்ளது; ஒரே மண்ணிலிருந்து படைக்கப்பட்டுள்ளது. மனிதனின் வெளித்தோற்றங்கள் யாவும் அவனுடைய உண்மையான ஆன்மீக நிலையை பிரதிபலிப்பவை அல்ல எனவும் பஹாவுல்லா போதித்தார். உலக சமயங்கள் அனைத்தும் கடவுளின் நல்விருப்பத்தையும் நோக்கத்தையும் படிப்படியாக வெளிப்படுத்துவதற்காகவே தோன்றியுள்ளன எனவும் பஹாவுல்லா போதிக்கின்றார். உலகளாவிய மனித சமூகம் செழுமை பெற வேண்டுமானால், அது சில அடிப்படை கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவை வருமாறு:
|
பல்வேறு இன, நிற, நாடுகளைச் சார்ந்த பஹாய்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
குழந்தைகள் நிகழ்ச்சி
நேப்பாளத்தில் பஹாய் பிரார்த்தனைக் கூட்டம்
கம்போடிய இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இங்கிலாந்து நாட்டு பஹாய் அகாடமியின் கலைஞர்கள்
ஹாங்காங்கில் பஹாய் பெண்கள் மாநாடு | ||||||||||